Sunday, February 5, 2017

ஆர்வக்கோளாறு

             


இந்த கட்டுரை யார் மனதையும் புண்படுத்துவதற்காக  இல்லை )

                                                                                                                                                                     
 இன்று நம் நாட்டில் பல இடங்களில் அன்றாடம் பார்க்கும் ஒரு சில அறிவுஜீவிகளை பற்றிய கட்டுரை இது,  ஆர்வக்கோளாறு  என குறிப்பிட்டுள்ள இவர்களின் செயல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
                               

                       ➤ "உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்" என facebook இல் ஒரு போஸ்ட் வந்தால் அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அப்படியே ஷேர் பண்ணி அதை தேவை இல்லாமல் 4 பேருடன் tag  செய்யும் அறிவாளிகள் இவர்கள்.
                      ➤ "தமிழனா இருந்தா share பண்ணு like பண்ணு" என ஏதாவது கிறுக்கன் create  பண்ணி போட்டுட்டா போதும்  "தமிழன்டா" , "சிங்கம்டா" என அதை ஷேர் பண்ணி லைக் பண்ணி கொலை பண்ணும் ஆட்கள்.
                     ➤  போராட்டம் ஊர்வலம் நடந்தால் எதற்காக நடக்கிறது அதன் தன்மை என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ளாமல் கூட்டத்தில் நடுவில் சென்று selfie எடுத்துக்கொள்வார்கள், மீசை இருந்தால் அதை முறுக்கிக்கொண்டே  ஒரு selfie,  பிறகு facebook  இல் "தமிலண்டா"  "தமிலைச்சிடா" என தமிழை  கொலை செய்பவர்கள்.
                    ➤ திரைப்படங்களை பார்க்காமல் யாரோ கூறும் விமர்சனத்தை கேட்டுவிட்டு இவர்கள் படத்தை பார்த்தது போல் கழுவி ஊத்துவார்கள்.
                    ➤ ஏதாவது ஒரு கூட்டத்தில் தல fans  இருக்கீங்களா தளபதி    fans  இருக்கீங்களா என கேட்டால் போதும் தொண்டை தண்ணி வற்றும் வரை காரணம் இல்லாமல் கத்தும் ஜீவிகள்.
                   ➤ நாட்டில் பேசவேண்டிய விவாதிக்கவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கும்போது லாஜிக்கே இல்லாத விடயத்தை கூட்டம் சேர்த்து ஆய்வுக்கு உட்படுத்துவார்கள்
                  ➤மணிரத்னம், கெளதம் மேனன் போன்றோரின் "A" class audience படங்களை பார்க்கும்போது  பாதியிலே தூங்கிவிட்டு tv விமர்சனத்தில் புகழும்  பாய்ண்டுகளை  எடுத்து படத்தை பற்றி  நண்பர்களிடம் பேசுவார்கள் .
                 ➤ இந்த கூட்டத்திற்கு ஒரு தலைவன்,   சாத்தியம் இல்லாத ஒன்றை செய்வதற்கு  கூட்டம் ஒன்றை கூட்டுவர், அதில் ஆர்வம் வழிய வழிய என்ன செய்ய போகிறோம் என்றே தெரியாமல்  சேரும் கூட்டம்,  தப்பி தவறி யாராவது கேட்டால் அவனை வேற்றுகிரகவாசியை போல் பார்ப்பார்கள் இந்த அறிவாளிகள்.
               ➤ இவன் மட்டும் தான் தமிழன்  என்பது போல்  தமிழ் மூச்சு பேச்சு என்று கூறிவிட்டு  ATM இல் மொழி தேர்வு செய்வதில் ஆங்கிலத்தை தேர்வு செய்யும் உத்தமன்.
              ➤வியாபாரத்திற்காக "வேஷ்டி தினம்"  என ஒன்றை உருவாக்கியது தெரியாமல் வேஷ்டிக்கட்டிக்கொண்டு  வந்து ப்ரேமம் EFFECTஇல் ஒரு ரவுண்டு அடித்து "தமிழன்"  என அலப்பறை செய்வார்கள்.



                     மேற்கண்ட  ஒவ்வொரு குறிப்புகளும் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கான வழி  இல்லை, இது அவர்களை மட்டும் இல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பை  ஏற்படுத்தும்,
சிந்திப்போம்,  செயல்படுவோம்.

No comments:

Post a Comment