Wednesday, February 15, 2017

விமர்சனம் - பார்த்திபன் கனவு (புதினம்)



நாவல் பெயர்- பார்த்திபன் கனவு
கதாபாத்திரங்கள்- பொன்னன், வள்ளி, பார்த்திபன், விக்ரமன்,    அருண்மொழிதேவி, மாறப்பதேவர், நரசிம்மவர்மன், சிவனடியார்,
 குந்தவி,  பரஞ்சோதி முனிவர்

                   கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டு பின்பு புத்தககமாக வெளியிடப்பட்ட புதினம்   பார்த்திபன் கனவு.  இதில் நரசிம்மவர்மன், பரஞ்சோதி முனிவர், யுவாங் சுவாங் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
     இந்த கதையின் கருவாக இருப்பது "தந்தையின் கனவை நிறைவேற்றுதல்"
மற்றும்  சில குறிப்புகளும் கதையில் கருவுடன்   பயணிக்கின்றன அவை,
                                         தாய் நாட்டை மீட்டல் 
                                         கொடுத்த வாக்கை  நிறைவேற்ற தவிக்கும் தாய் 
                                         காதலியை கைப்பிடித்தல் 
                                         மூடநம்பிக்கையும் போலி சாமியாரும் 

என பல சுவாரசியமான சம்பவங்களை கதையில் இணைத்துள்ளார் கல்கி. 
                                                   ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடையிடையே  சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யார்?, இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.

                       கதை நகரும் இடத்தையும் அந்த சூழலையும் வர்ணிப்பதில் அந்த இடங்களை நம் கண் முன்னே கொண்டு வருகிறார் கல்கி. ஒரு அரசனுக்கு தன்  தாய் நாட்டின் மேல் உள்ள பற்று, ஆட்சி முறைகளும் மக்களின் வாழ்வாதாரங்கலும் இதில் கூறப்பட்டுள்ளன, கதையில்  வரலாற்று கதாபாத்திரங்களை சேர்த்து உண்மை சம்பவத்தை கூறுவது போல் அமைத்திருப்பது கதைக்கு பலத்தை  சேர்க்கிறது. இடையிடையே கேள்விகள் எழுந்தாலும் அவற்றிற்கானா விடையை இறுதியில் கூறி திருப்திபடுத்துகிறார்.
           ஒரு கதையாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் ஒழுக்க  நெறிமுறைகள் என  பலவற்றையும் கூறியுள்ள இந்த புதினம் நாம் கட்டாயம் படிக்க  வேண்டிய ஒன்று.


ref - wikipedia 
                             

Tuesday, February 14, 2017


அவளும் நானும்

சமீபத்தில் கேட்ட பாடல்களில் ரசிக்கும் வகையில் இருந்த பாடல்களில் இதுவும் ஒன்று. பாரதிதாசன் வரிகளில் A R ரஹ்மான் இசையில்  விஜய் யேசுதாஸ் குரலில் வந்த பாடல் இது
"அவளும் நானும்
    அமுதும் தமிழும்
    அவளும் நானும்
        அலையும் கடலும்"
என உவமை அணியில் பாடலை அமைத்திருப்பார்  பாரதிதாசன். இந்த பாடலானது நாயகனும் நாயகியும் செய்யும் பயணத்தில் நாயகி தன்னுடன் இருப்பதை  சந்தோசமான தருணமாக நினைத்துகொண்டு  அந்த  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக இந்த பாடலை அமைத்திருப்பார் இயக்குனர். பாடலின் ஆரம்பத்தில் உள்ள இசையானது பறவைகளின் ஓசையும் காற்றின் வருடலையும் இசையோடு  இணைத்திருப்பார் ரகுமான். நீங்களும் அந்த பாடலை கேளுங்கள் ரசியுங்கள்.


 பாடலின் இணைப்பு 




பேஷ் பேஷ்



Sunday, February 5, 2017

ஆர்வக்கோளாறு

             


இந்த கட்டுரை யார் மனதையும் புண்படுத்துவதற்காக  இல்லை )

                                                                                                                                                                     
 இன்று நம் நாட்டில் பல இடங்களில் அன்றாடம் பார்க்கும் ஒரு சில அறிவுஜீவிகளை பற்றிய கட்டுரை இது,  ஆர்வக்கோளாறு  என குறிப்பிட்டுள்ள இவர்களின் செயல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை வைத்து சுலபமாக கண்டுபிடிக்கலாம்.
                               

                       ➤ "உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்" என facebook இல் ஒரு போஸ்ட் வந்தால் அதன் உண்மை தன்மையை ஆராயாமல் அப்படியே ஷேர் பண்ணி அதை தேவை இல்லாமல் 4 பேருடன் tag  செய்யும் அறிவாளிகள் இவர்கள்.
                      ➤ "தமிழனா இருந்தா share பண்ணு like பண்ணு" என ஏதாவது கிறுக்கன் create  பண்ணி போட்டுட்டா போதும்  "தமிழன்டா" , "சிங்கம்டா" என அதை ஷேர் பண்ணி லைக் பண்ணி கொலை பண்ணும் ஆட்கள்.
                     ➤  போராட்டம் ஊர்வலம் நடந்தால் எதற்காக நடக்கிறது அதன் தன்மை என்ன என்றெல்லாம் தெரிந்துகொள்ளாமல் கூட்டத்தில் நடுவில் சென்று selfie எடுத்துக்கொள்வார்கள், மீசை இருந்தால் அதை முறுக்கிக்கொண்டே  ஒரு selfie,  பிறகு facebook  இல் "தமிலண்டா"  "தமிலைச்சிடா" என தமிழை  கொலை செய்பவர்கள்.
                    ➤ திரைப்படங்களை பார்க்காமல் யாரோ கூறும் விமர்சனத்தை கேட்டுவிட்டு இவர்கள் படத்தை பார்த்தது போல் கழுவி ஊத்துவார்கள்.
                    ➤ ஏதாவது ஒரு கூட்டத்தில் தல fans  இருக்கீங்களா தளபதி    fans  இருக்கீங்களா என கேட்டால் போதும் தொண்டை தண்ணி வற்றும் வரை காரணம் இல்லாமல் கத்தும் ஜீவிகள்.
                   ➤ நாட்டில் பேசவேண்டிய விவாதிக்கவேண்டிய பிரச்சனைகள் பல இருக்கும்போது லாஜிக்கே இல்லாத விடயத்தை கூட்டம் சேர்த்து ஆய்வுக்கு உட்படுத்துவார்கள்
                  ➤மணிரத்னம், கெளதம் மேனன் போன்றோரின் "A" class audience படங்களை பார்க்கும்போது  பாதியிலே தூங்கிவிட்டு tv விமர்சனத்தில் புகழும்  பாய்ண்டுகளை  எடுத்து படத்தை பற்றி  நண்பர்களிடம் பேசுவார்கள் .
                 ➤ இந்த கூட்டத்திற்கு ஒரு தலைவன்,   சாத்தியம் இல்லாத ஒன்றை செய்வதற்கு  கூட்டம் ஒன்றை கூட்டுவர், அதில் ஆர்வம் வழிய வழிய என்ன செய்ய போகிறோம் என்றே தெரியாமல்  சேரும் கூட்டம்,  தப்பி தவறி யாராவது கேட்டால் அவனை வேற்றுகிரகவாசியை போல் பார்ப்பார்கள் இந்த அறிவாளிகள்.
               ➤ இவன் மட்டும் தான் தமிழன்  என்பது போல்  தமிழ் மூச்சு பேச்சு என்று கூறிவிட்டு  ATM இல் மொழி தேர்வு செய்வதில் ஆங்கிலத்தை தேர்வு செய்யும் உத்தமன்.
              ➤வியாபாரத்திற்காக "வேஷ்டி தினம்"  என ஒன்றை உருவாக்கியது தெரியாமல் வேஷ்டிக்கட்டிக்கொண்டு  வந்து ப்ரேமம் EFFECTஇல் ஒரு ரவுண்டு அடித்து "தமிழன்"  என அலப்பறை செய்வார்கள்.



                     மேற்கண்ட  ஒவ்வொரு குறிப்புகளும் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கான வழி  இல்லை, இது அவர்களை மட்டும் இல்லாமல் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பை  ஏற்படுத்தும்,
சிந்திப்போம்,  செயல்படுவோம்.

THAT பல்பு MOMENT

                         





                                    பல்பு வாங்குவது என்பது எங்கோ நடக்கும் ஏதோ ஒரு சம்பவத்தில் தேவையில்லாமல் தலையை விட்டு அசிங்கப்படும் அந்த சிறிய தருணம் "பல்பு MOMENT"  ஆக மாறுகிறது.

இந்த "பல்பு MOMENT"  வாங்கும் சமயத்தில் பெரும்பாலும்  அது நம்மோடே போய்விடுகிறது, உதாரணமாக "மச்சான்" என்று ஒரு சத்தம் தூரத்தில் இருந்து வரும். நம்மை தான் கூப்பிடுகிறான் என்று நாம் அங்கு செல்லும்போது அவன் வேறு யாரையோ கூப்பிட்டு பேசிக் கொண்டு இருப்பான், அப்போது நம் தலை மேல் ஒரு லைட் எரியும், இந்த சம்பவம் யாருக்கும் தெரியாமல் நம்மோடே  போய்விடுகிறது.
                     இது போல் ஒரு சம்பவத்தை நான்  இரண்டு ஆண்டுகளுக்கு முன் செல்போனையும்  3 பேரையும் வைத்துக்கொண்டு  2 மணிநேரத்தில்   2நிமிட குறும்படமாக  இந்த "பல்பு MOMENT" ஐ  கருவாக கொண்டு உருவாக்கினேன். 19 வயதில் இந்த படத்தை எடுத்தது எனக்கு ஒரு தன்னம்பிக்கையை கொடுத்தது. அந்த படத்தில் முதன்மை கதாபாத்திரம்,   ஒருவனை  துரத்தி தன்னுடைய செல்போனை வாங்குகிறான் ஆனால்  இறுதியில் வேறு மாதிரியாக சென்று அவன் "பல்பு" வாங்குகிறான் இதுவே இதன்  கதை.


TITLE VAIKALA SHORT FILM


இதே போல் a moment to remember எனும் திரைப்படத்தில் 5 வது நிமிடத்தில் இதே போல் ஒரு காட்சி வரும் அதில் செல்போனிற்கு பதிலாக COOLDRINKS  இடம்பெறும் அந்த காட்சியை இயக்குனர் அழகாக அமைத்திருப்பார். அந்த காட்சி கதையின் முக்கிய  காட்சியாகவும்  கதை நகர்வு மற்றும் உணர்ச்சிபூர்வமான கிளைமாக்ஸ் காட்சிக்கும் இந்த முதல் காட்சியை  வைத்தே உருவாக்கியுள்ளார் இயக்குனர் (JOHN H. LEE) . இந்த கதையில் இது "பல்பு MOMENT " ஆக இருந்தாலும் கதைப்போக்கில் சென்று பார்க்கும்பொது உணர்ச்சிவசப்படும் வகையில் வைத்திருப்பது இயக்குனரின்  சாமர்த்தியம்.

           


     தமிழில் (எனக்கு 20 உனக்கு 18)  திரைப்படத்திலும் இதே போன்று ஒரு காட்சி இடம்பெறும்,  அதிலும் 5வது நிமிடத்தில் தான். அதில் கதாநாயகன் தான் படிக்கச் கொண்டு வந்த புத்தகத்தை திரிஷா படித்து கொண்டு இருப்பார், அதை கண்டு அதிர்ச்சி அடையும் அவர் பின்பு தனது பையில் அந்த புத்தகத்தை எடுப்பார். இதில் கதாநாயகன் "பல்பு" வாங்கியிருந்தாலும் ஹீரோ, ஹீரோயின்   இருவருக்கும் ஒரே டேஸ்ட் என கூற முயற்சித்திருக்கிறார் இயக்குனர்.

                                           

   மேற்கண்ட மூன்று சம்பவங்களும் வேறு வேறு என்றாலும் ஆழ்ந்து பார்க்கும் போது கரு  ஒன்றுதான் "பல்பு ".
இனி வரும் காலங்களில் காட்சிகளையோ கதைகளையோ  சுடாமல் அந்த காட்சியை ரசித்து பாருங்கள் உங்களுக்கு வேறு பரிமாணத்தில் அதை விட அழகாக கிடைக்கும். மூளையை பயன்படுத்தாமல் காட்சிகளை திருடினால் இறுதியில் உங்களுக்கு கிடைப்பது "பல்பு" ஆக தான் இருக்கும்.

பார்த்ததில் பிடித்தது

                   சமீபத்தில் பார்த்த ஒரு குறும்படம் 'Time travel' concept ஐ  வைத்து வெறும் மூன்று நிமிடங்களில் ஒரு கதையை அழகாக கூறியுள்ளனர் அதுவும் வசனம் எதுவும் இல்லாமல் மௌன மொழியில் கூறி உள்ளனர்.
              கருப்புவெள்ளை  நிறத்தில் படத்தில் பெரும்பகுதியாக பயன்படுத்தி சில இடங்களில் கலரை பயன்படுத்தியது படத்தின் சிறப்பு இதில் நடிகர்களின் நடிப்பு கவனிக்கும்படி இல்லை என்றாலும் தொழில்நுட்பத்தில் அதாவது படத்தொகுப்பு பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பெரிய அளவில்  பொருட்செலவு இல்லாமல் தரமாக ஒரு குறும்படம் எடுத்த TIMELESS .