Wednesday, February 15, 2017

விமர்சனம் - பார்த்திபன் கனவு (புதினம்)



நாவல் பெயர்- பார்த்திபன் கனவு
கதாபாத்திரங்கள்- பொன்னன், வள்ளி, பார்த்திபன், விக்ரமன்,    அருண்மொழிதேவி, மாறப்பதேவர், நரசிம்மவர்மன், சிவனடியார்,
 குந்தவி,  பரஞ்சோதி முனிவர்

                   கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக வெளியிடப்பட்டு பின்பு புத்தககமாக வெளியிடப்பட்ட புதினம்   பார்த்திபன் கனவு.  இதில் நரசிம்மவர்மன், பரஞ்சோதி முனிவர், யுவாங் சுவாங் போன்ற வரலாற்று கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளனர்.
     இந்த கதையின் கருவாக இருப்பது "தந்தையின் கனவை நிறைவேற்றுதல்"
மற்றும்  சில குறிப்புகளும் கதையில் கருவுடன்   பயணிக்கின்றன அவை,
                                         தாய் நாட்டை மீட்டல் 
                                         கொடுத்த வாக்கை  நிறைவேற்ற தவிக்கும் தாய் 
                                         காதலியை கைப்பிடித்தல் 
                                         மூடநம்பிக்கையும் போலி சாமியாரும் 

என பல சுவாரசியமான சம்பவங்களை கதையில் இணைத்துள்ளார் கல்கி. 
                                                   ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசானது. சோழ அரசனான பார்த்திபன் தனது மகனான விக்கிரமனுக்கு சோழ அரசு மீளவும் தனது இழந்த புகழைப் பெற வேண்டும் என்று அறிவூட்டுகின்றான்.
பல்லவ மன்னனான நரசிம்மவர்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன், பல்லவ மன்னனை வீரத்துடன் எதிர்த்து மரணமடைகின்றான். இதன் பின்னர் சோழ நாடு பல்லவரிடம் இருந்து எவ்வாறு சுதந்திரம் பெற்றது என்பதை கதை சொல்கின்றது. கதையின் பெரும் பகுதி சோழ இளவரசனான விக்கிரமன், படகோட்டி பொன்னன், பொன்னனின் மனைவி வள்ளி, சோழ சேனாதிபடி மாரப்ப பூபதி போன்றோரைச் சுற்றி நிகழ்கின்றது.
இடையிடையே  சிவ பக்தர் வேசத்தில் ஒருவர் வந்து இளவரசனுக்கு உதவி செய்கின்றார். பின்னர் இந்த சிவ வேசத்தில் வந்தவர் யார்?, இதேவேளை நரசிம்மனின் நரபலி போன்றவற்றிற்கு எதிரான செயற்பாடுகளையும் கதை காட்டுகின்றது. மேலும் 63 நாயன்மார்களில் ஒருவரான பரஞ்சோதி அடிகள் அல்லது சிறுத்தொண்டர் எனப்படும் நாயனார் பற்றிய சம்பவங்களும் இடம் பெறுகின்றன.
சிறுத்தொண்டர், வாதாபி வரை நரசிம்மனின் படையை நடத்திச் சென்று புலிகேசியை அவன் தலைநகரான வாதாபியிலேயே வதம் செய்த சேனாதிபதியாவார்.
வாசகர்கள் கல்கியின் சிவகாமியின் சபதம் புதினத்தை வாசித்தபின் பார்த்திபன் கனவை வாசித்தால் சிவகாமியின் சபதத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் பார்த்திபன் கனவிலும் தொடர்வதை ரசிக்கலாம்.

                       கதை நகரும் இடத்தையும் அந்த சூழலையும் வர்ணிப்பதில் அந்த இடங்களை நம் கண் முன்னே கொண்டு வருகிறார் கல்கி. ஒரு அரசனுக்கு தன்  தாய் நாட்டின் மேல் உள்ள பற்று, ஆட்சி முறைகளும் மக்களின் வாழ்வாதாரங்கலும் இதில் கூறப்பட்டுள்ளன, கதையில்  வரலாற்று கதாபாத்திரங்களை சேர்த்து உண்மை சம்பவத்தை கூறுவது போல் அமைத்திருப்பது கதைக்கு பலத்தை  சேர்க்கிறது. இடையிடையே கேள்விகள் எழுந்தாலும் அவற்றிற்கானா விடையை இறுதியில் கூறி திருப்திபடுத்துகிறார்.
           ஒரு கதையாக மட்டும் இல்லாமல் நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் ஒழுக்க  நெறிமுறைகள் என  பலவற்றையும் கூறியுள்ள இந்த புதினம் நாம் கட்டாயம் படிக்க  வேண்டிய ஒன்று.


ref - wikipedia